விபத்து

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல், விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 16) ஒரே நாளில் மின்சாரம் தாக்கி ஐவர் பலியாகியுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் புலி ஒன்று இறந்துகிடக்கக் காணப்பட்டது. அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதில் அந்தப் புலி மடிந்ததாக நம்பப்படுகிறது.
கனமழை காரணமாக ஃபூனான் மால் கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்துக்கு இட்டுச் செல்லும் சரிவுப்பாதை வழுக்கலாக இருந்ததால் அதில் சென்ற குறைந்தது 10 கார்கள் கட்டுப்பாடு இழந்து சுவரில் மோதின.
மலேசிய நெடுஞ்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர் காருடன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.